A. கிரகங்களின் மறைவு இடங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++-
1 சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , - இலக்கினதிக்கு 8 ¸12 இல் இருந்தால் மறைவு ஸதானம் ஆகும்
-
2 சந்திரன் , புதன் , குரு , இலக்கினத்திற்கு 3 , 6, 8 , 12 இல் இருந்தால்மறைவு ஸ்தானம் ஆகும்
-
.
3.சுக்ரன் இலக்கினதிக்கு 3 , 8 இல் இருந்தால் மட்டும் மறைவு , சுக்ரன் இலக்கினதிக்கு 6 , 12 , இருந்தால் மறைவு இல்லை .
-
4. மேலும் ஒன்பது கிரகங்களில் சுக்கிரனுக்கு மாத்திரம் விரையாதிபத்தியதோஷம் கிடையாது
-
.
B .புல் தரையில் படுத்து உறங்கும் அமைப்பு என்ன ?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++-
12 – க்கு உடையவன் 6 அல்லது 8 இல் அமர , சனி , ராகு , 12 இல் அமர சுபர் பார்வை பெற வில்லை என்றால் புல் தரை தான் படுக்கும் இடமாக அமையும் .
-
C மஞ்சத்துசெம்பட்டு மெத்தை மீது படுத்து உறங்கு அமைப்பு என்ன ???
-12 இல் குரு சுப ராசியில் அமர அல்லது லக்ன கேந்திரத்தில் உச்ச கிரகம் இருந்தாலும் அந்த இடத்தை சுப கிரககங்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஜாதகன் ஊஞ்சல் ஆடும் மஞ்சத்து செம்பட்டு மெத்தை மீது படுத்து உறங்கும் பாக்கியத்தை அடைவான் .மேலும் உடல் நன்றாக இருக்க நல்ல சத்தான உணவும் வாசனைத் திரவியம் பூசிக்கொண்டும் நல்ல பெண்கள் சூழ பவனி வருவான் . மேலும் இன்னிசை முழங்க அழகிய பெண்கள் சேவை செய்ய அந்த ஜாதகர் ஒரு ராஜா போல் வாழ்வார் என்பதாம.
-
.
D . நீண்ட ஆயுள் உடைய அமைப்பு என்ன ?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++-
இலக்கினதிக்கு 8 க்கு உடைய கிரகத்தை 9 க்கு உடைய கிரகம் சுபர் , பாவி , அனாலும் அல்லது உச்சன் ஆகி இருந்தாலும் , பார்த்தாலும் சந்தேகம் இல்லாமல் 100 வயது வாழ்வான் என்பதாம் -
-
E . சுக்ரன் நின்ற ராசிக்கு உடையவன் இலக்கினதிக்கு 6 , 8 , 12 , இல் மறைய , பாவர் சேர , அல்லது பார்க்க , எத்தனை மனம் புரிந்தாலும் மனைவி இல்லை
-
.
F . தேடிய பொருளை புதைத்து வைப்பவன் யார் ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++12 –க்கு உடைவன் பாவிகளுடன் சேர்ந்து சுபர் வீட்டில் இருந்தாலும் பார்த்தாலும் , 12 –ம் வீடடு க்கு உடையவன் 12 இல் அமர பணம் , பொருள் அதிகம் தேடி கஞ்சத்தனம் கொண்டு ஒருவருக்கும் கொடுக்காமல் மண்ணில் புதைத்து வைப்பான் என்பதாம்.
-
G .புதைத்த பொருளை மறப்பவன் யார் ?
+++++++++++++++++++++++++++++++++++++++++++
12 –ம் வீட்டில் செவ்வாய் தனித்து நிற்க ,அல்லது பார்க்க சம்பாதித்து புதைத்த பொருளை வைத்த இடம் தெரியாமல் மறந்து இழப்பான் என்பதாம்.
-
H. பூனைகண்ணன் யார் ?
++++++++++++++++++++++++++++2 –ஆம் வீட்டின் அதிபதி பாவ கிரகமாகி 8 – ம் வீட்டில் சனி , சந்திரனுடன் சேர , சூரியன் 6 –ம் வீட்டில் அமர ,அந்த ஜாதகர் பூனைகண்ணன் ஆவார்
- .
I . பிறவிக் குருடன் எப்படி ?
+++++++++++++++++++++++++++++++++++
லக்கினாதிபதி , 2 –ஆம் வீடடுக்கு உடையவன் , சூரியன் ,சுக்கிரனும் ஆகிய ,நால்வரும் ஒன்றாய் கூடி இலக்கினதுக்கு 6 ,8 , 12 ,_ஆம் ராசிகளில் இருந்தால் பிறவிக் குருடன் என்பதாம் .
-
J ஊமை எப்படி ?
-
2 – ஆம் வீட்டின் அதிபதியோடு புதனும் கூடி 1 , 3 ,6 , ஆகிய ராசிகளில் இருந்தாலும் , லக்கினாதிபதி , சுக்கிரனுடன் கூடி 6 , 8, 12 ,ஆகிய மறைவு ராசிகளில் இருந்தாலும் ஊமையாய் இருப்பார் என்பதாம்.
-
K பிரம்மச்சாரியாக இருப்பவர்கள் யார் ?
+++++++++++++++++++++++++++++++++++++++++
-
லக்கினாதிபதி + 7 ஆம் வீட்டுக்கு உடையவனுடன் கூடி 6 , 8, 12 ,இல் இருந்தால் திருமணம் இல்லை . பிரம்மச்சாரி ஆக இருப்பார் என்பதாம். .நன்றிகள்
No comments:
Post a Comment