Friday, February 12, 2016

திசா சந்திப்புகள் என்ன செய்யும் நன்மையா ???தீமையா ???

திசா சந்திப்புகள் என்ன செய்யும் 

நன்மையா ??? தீமையா ???

பதிவு எண் : 92  ====  தேதி = 3 – 8 – 2015 


1. திருமண பொருத்தம் பார்க்கும்போது மணமகன் , மணமகள் இருவருக்கம் ஒரே கிரகத்தின்  திசைகள்  நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் இந்த ஜாதகம் வேண்டாம் , வேறு ஜாதகம் பார்க்கலாம் என்று சில ஜோதிடர்கள் மறுத்து விடுகின்றனர் ==  இது பற்றி இப்போது ஆய்வுகள்  செய்வோம் ==


2. மீறி விளக்கம் கேட்டால் அவர்கள் ஏதோ பல பொருந்தாத காரணங்கள் சொல்லுகின்றனர் == ஒரே திசைகள் நடந்தால் முட்டிக்கும் , மோதிக்கும் என்றும்  சொல்லுகிறார்கள்  ==

3. பொதுவாகவே 1 , 5 , 9 ,  திரிகோண ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களும  , 1 , 4 , 7 , 1௦ , கேந்திர ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களின் திசைகளும் , தீமைகள் செய்யாது =

4. மாறாக 3 , 6 , 8 , 12 , ஆம் ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களின் திசைகள்  இருவருக்கும்  நடந்தால் மட்டுமே திசா சந்திப்புகள்  பாதிப்புகள் செய்யும் ==

5. அதுவும் ஆயுள் பாவம் சரியாக  இல்லாதவர்களை மட்டுமே பாதிக்கும் == ஆயுள் பாவம் நன்றாகவே  இருப்பவர்களுக்கு சிறிது  சிரமம் மட்டுமே தரும் ==           ஆகவே 6 மாதம் இடைவேளையில் இருவருக்கும் ஒரே திசைகள் ஆரம்பம் ஆகவோ அல்லது முடியும் சமயமா என்பதையும்  கவனிக்கவும் == அப்படி இருந்தால் மட்டுமே அந்த இரு ஜாதகங்களையும்  பொருத்தக்  கூடாது = இது கேரளா முறைகள்  ==

6. தமிழகத்தில் நமது ஜோதிட சித்தர்களால் உருவாக்கி வைத்த விதிகள்  மூலமாகவும் , வட நாட்டு சமஸ்கிருதம் மூலமாகவும் ஜோதிட விதிகள் கடை பிடிக்கப்  பட்டு வருகிற்து == தமிழகம் என்பது வைதீக முறைகளை கடை பிடிக்கும் ஜோதிட  முறைகள் ஆகும் == ஜோதிடம், வைத்தியம்,ஆச்சாரம்,இவைகள் தாங்கள் வாழும் இடத்துக்கு ஏற்ப மாறுபடும் == இதைத் தான் கால, தேச, வர்த்தமானம் , அனுபவம் சுருதிகள் , யுக்திகள் , என்று சொல்லுகிறோம் == 

7. உதாரணமாக தமிழ் நாட்டில் தாய்மாமன் பெண்ணை மணப்பது என்பது காலம் காலமாக  நடைமுறைக்கு  உள்ள திருமணம் ஆகும் == சில இடங்களில் இதற்க்காக  பெண்ணை  தூக்கி கட்டாய திருமணம் செய்வதையும் நாம் அனுபவமாக பார்க்கிறோம் = பெண் கேட்கும்போது  முறை மாப்பிள்ளை இருக்கிராரா  என்று விஷயம் கேட்டு விட்டுப்  பிறகு பெண் கேட்கலாம் என்ற பழக்கம் உண்டு ==

8. மேலும் மகாராஷ்டிர , பீகார்வாசி , ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர்கள் தாய்  மாமன் மகளை திருமணம் செய்யாமல் தங்கை என்று கூறி திருமணம் செய்வது இல்லை =

9. பொதுவாகவே  தனுசு லக்னம் , மீன லக்னம் ஆண்களுக்கு 7 ஆம் இடத்தின் கிரகம் புதன் ஆகும் == இது தாய் மாமனுக்கு காரகம் வகிக்கும் கிரகம் ஆகும் =
இவர்களுக்கு தாய்மாமன் உறவில் பெண் அமையும் , அல்லது ஒன்று விட்ட தாய் மாமன் உறவில் நடக்கும் = மேலும் புதன் அமர்ந்த இடம் , சாரம் , சேர்ந்த  கிரகம் , பார்த்த கிரகம் இவைகள் மூலமாகவும் பெண் அமையும் ==ஆனால் இதே விதி பீகார்வாசி , மகாராஷ்டிரா  மாநில மக்களுக்கு பொருந்துமா  ?????

1௦. மேலும் கேரளாவில் அதிகாலை 3 மணீக்கு கோவில் நடை திறக்கப்படும் ==கேரளாவாசிகள் ஈர வேஷ்டியை அணிந்தும், கருப்பு வேஷ்டியும் அணிந்து செல்வார்கள் == பெண்கள் குளித்துவிட்டு  தலை  வாராமல் வெள்ளை சேலையை அணிந்து கோவில் வழிபாடுகள் செய்கின்றனர் == இந்த வழிபாடு முறைகள் தமிழகத்தில்  கிடையாது == இது தமிழகத்தில் அமங்கலமாக கருதப்படும்  ==

11. தேவ கேரளம் என்ன சொல்கிறது ?????

     தசா  சந்தைன  மனஸ்தாபம் ஜாதிவர்க்கே விகாரக்ருத்
தசாசந்த்தெள ஜ்வரம் தாபம் சாந்தியா சாத்தியம் ப்ரசாஸ்யதி == இதன் விளக்கம் - இருவருக்கும் ஒரே திசைகள் 6 மாதா காலத்தில் ஆரம்பம் ஆகவோ அல்லது முடிய இருக்குமாயின் மனஸ்தாபம் , சுரம்,பல கவலைகள் , ஏற்படும்  என்பதாம் ==

12. மேலும் தேவ கேரளம் கூறுவது ==

ஸ்வர்ககேச  வர்க்கோத்தமே ஸ்வாம்சே  சுபாம் சே வா தசா சந்தெள ந  தோச பாக் == அதாவது வர்க்கோத்தமம்  , சொந்த வீடு , நட்பு நவாம்சம் , சுப நவாம்சம் , இவைகளில் இருக்கும் கிரகம் திசா சந்தியில் இந்த தீமையும் செய்வது  இல்லை ==

13. மேலும் ஜோதிட சாஸ்திர  படி ஒரே நட்சத்ரம் 27 – வது நட்சத்ரம் , 2 வது நட்சத்ரம் பொருத்தமானவை == அவ்வாறு அமையும் இருவருக்கும் ஒரே திசை நடைபெறும் = எந்த ஒரு திசையும்  முழுவதுமாக நன்மையோ , தீமையோ , செய்வது இல்லை , இரண்டும் கலந்து தான் நடக்கும் == ஆகவே திசைகள் தான் அமர்ந்த இடம் , சாரம் , ஆதிபத்தியம் , தன்னோடு சேர்ந்துள்ள  கிரகம் , பார்த்த கிரகம்,     நவாம்சத்தின் நிலைகள் மூலமாகவும்  பலன் கொடுக்கும் என்பதாம்==

No comments:

Post a Comment