Thursday, February 11, 2016

முக்தி யோகம் என்றால் என்ன ?????

முக்தி யோகம் என்றால் என்ன ???

பதிவு எண் : 90        தேதி = 02-08-2015


இந்த மண்ணில் தாயின் வயிற்றில்  பிறப்பதும் , பின் பல துன்பங்களை  அனுபவித்து இறப்பதும் , பின் மீண்டும் மீண்டும் , பிறப்பும் , இறப்பும் நடை பெறுகின்றனர். ஒரு மனிதனுக்கு 7 பிறவிகள் என்றும் சொல்லப்படுகிறது.

                
இவைகள் யாவும் பிராப்த கர்மா , சஞ்சீத  கர்மா , ஆகாமிய கர்மா , என்ற மூன்று வகை கர்மாக்கள்  மூலமாகவும் பிறப்பும் , இறப்பும் , நிர்னயம் செய்யப்படுகிறது.

சஞ்சீத  கர்மா என்பது இது வரை நாம் செய்துள்ள மொத்த நல்வினை , தீய வினைகளின் மொத்த தொகுப்புகள் ஆகும்.

பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் நாம் அனுபவிக்க கொண்டு வந்திருக்கும்  நல்வினை , தீய வினைகளின் மொத்த தொகுப்பு ஆகும் .

ஆகாயமிய கர்மா என்பது நாம் இந்த பிறவியில் செய்யும் நல்வினை , தீய வினைகளின் அடிப்படையில் அந்த கர்மாவின் தொகுப்புகள் சஞ்சீத  கர்மாவில் சேரும்.

ஆக மொத்தத்தில் நாம் பிறந்து நல்லது பிறருக்கு  உதவி செய்தால் நல் வினைகளும் , பிறருக்கு தீமை செய்தால் அது தீய கர்மா ஆக உருவாகி மீண்டும் மீண்டும்  பிறவி எடுக்கிரோம்.

பிறவியே எடுக்காமல் முக்தி அடையும் கிரக அமைப்பு என்ன என்பதையும் கீழே காண்போம் .

1. ஜனன லக்கினம் எது  ஆனாலும் அதற்கு 12 ஆம் இடமான அயன சயன போக ஸதானங்களில் ஞான காரகன் ஆன கேது இருக்க முக்தி யோகம் ஆகும்.

2. ஜனன லக்கினம் ஆனால் அந்த ஜாதகருக்கு இதுவே கடைசி  பிறவி இனி மறு பிறவி கிடையாது .

3. எந்த லக்கினம் ஆனாலும் 12 இக்கு உடையவன் 12 இல் ஆட்சி பெற மறு பிறவி கிடைக்காது.

4. 12 இக்கு உடையவன் ஏதேனும்  ஒரு  கிரகத்துடன் பரி வர்த்தனை பெற அவர்களுக்கும்  முக்தி யோகம் ஆகும். ஆயினும் இவர்களுக்கு இப்பிறவியில்  சோதனைகள் ஏற்பட்டு பின் புடம் போட்ட தெய்வ பக்தர் போல் ஆவார்கள் .

5. இவைகள் அனைத்தும் நடப்பதும்  , நடக்காமல் இருப்பதும் , இப்பிறவியில்  நாம் செய்யும் நன்மை தீமைகள் பொருத்தே அமையும்.

No comments:

Post a Comment