Friday, February 12, 2016

திருமணம் நிச்சியம் ஆகும் காலம் = தொகுதி = 1

திருமணம் நிச்சியம் ஆகும் காலம் = தொகுதி = 1

பதிவு எண் : 94    ======== தேதி  : 05-08-2015


கடவுள் அமைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று  ==
 
அழகான மனைவி  அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே 

நீபாதி நான் பாதி கண்ணே அருகில் நீ இன்றி தூங்காது பெண்ணே

கல்யாணம் கட்டிக் கிட்டு ஓடிப் போகலாமா ????????????
இல்லை ஓடிப் போயி கல்யணம் தான் கட்டிக்கலாமா ???


இப்படி  திருமணம் சம்பந்தமான பல பாடல்கள் உள்ளன =

இனி ஜோதிட ரீதியில் சில விளக்கம் இங்கே  பார்ப்போம் =

++++++++++++++++++++++++++++++++

1 == லக்கினம் என்பது ==ஆண் அல்லது பெண்

7 = ஏழாம் இடம் என்பது =  கணவன் அல்லது மனைவி

2 = ஆம் இடம் என்பது முகம் ,கண்கள் ,வாய் ,கவர்ச்சி,மனைவியின் மர்ம ஸ்தானம் ஆகும் =

8 =ஆம் இடம் என்பது மனைவியின் கண்கள் ,வாய் ,முகம் , கணவனின் மர்ம ஸ்தாணம் ஆகும் =

4 =ஆம் இடம் என்பது இவன் அனுபவிக்க இருக்கும் சுகம் = இதுவே மனைவிக்கு 1௦ ஆம் இடம்  கர்மா ஸ்தானம் ஆகும் = கர்ம வினைப்படி இவர்கள் தாம்பத்திய உறவு நடை பெறுகின்றது என்று பொருள் கொள்ளாலாம் ==

1௦= ஆம் இடம்  ஆணுககு  என்பது மனைவிக்கு 4 ஆம் இடம் சுகம் ஸ்தானம் ஆகும் =

6 = ஆம் இடம் ஆணுக்கு என்பது மனைவிக்கு 12 ஆம் இடமாக அமையும் == மேலும் கணவன் மனைவி இருவரும் கட்டி பிடித்து சண்டை போட்டால்  தான் குழந்தைகள் உருவாகும் = பெண்ணை ஆண் அடக்கி ஆள வேண்டும்  =

11 == இந்த பாவம் அதி  முக்கியமானது ஆகும் ==  ஏன்  எனில் ஒரு மனிதனின் எண்ணங்கள் , அபிலாசைகள் , இலட்சியங்கள் , ஆசைகள் , ஆகியவைகளை  நிறைவேற்றும் பாவம் ஆகும் = திருமண காலத்தில் அடைந்தால் மாகாதேவி இல்லையால்  மரண தேவி என்று முடிவு எடுக்கும் பாவம் ஆகும் =

11 = ஆம் பாவம் என்பது மனைவிக்கு  5 ஆம் பாவம் ஆக அமையும் = 5 ஆம் பாவம் என்பது மனம் , அறிவு , புத்தி , ஆசைகள் குறிக்கும் = அதேபோல்  மனைவிக்கு 11 ஆம் பாவம் என்பது கணவனுக்கு 5 ஆம் பாவம் ஆக அமையும் = 

3 = மூன்றாம் இடம் தான் =  அதி முக்கியம் வாய்ந்தது  = ஏன் எனில் ஒரு பெண்ணை தாம்பத்திய உறவில் திருப்தி கொள்ள வைக்கும் பாவம் ஆகும் == திட , தீர , பராக்கிரமான  ஸ்தானம்  ஆகும் =

9 == இந்த இடம் குழந்தை பாக்கியம் ஆகும் == ஆணுக்கு 3 ஆம் பாவம் என்பது பெண்ணுக்கு 9 ஆம் பாவம் ஆக அமையும் =

ஆக இனிமையாக  தாம்பத்யம்   உறவுகள் கொள்ள 1 , 2 ,3     ,   4 ,5 ,  6 , 7 , 8  9 ,  10 , 11 , 12  ஆகிய  பாவங்கள் , அதில் உள்ள  கிரகங்கள் , அதைப் பார்த்த கிரகங்கள் , களத்ரகாரகன்  ஆன சுக்கிரன் , ஜீவன்  காரகன் ஆன குரு ,  இவைகளைப்  பொருத்தே திருமண வாழ்க்கை சிறக்கும் அல்லது பாழாகும் =

              
                    
                       ( இன்னும்  வரும் )

No comments:

Post a Comment