Saturday, October 15, 2016

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமா ???
*****************************************************************
மொட்டை அடித்தல் ஓர் அலசல் ???
************************************************** 
-
  1- மஹாபாரத போரில் கர்ணன் , நாகா அஸ்திரம் கொண்டு , அர்ச்சுனன் மேல் ஏவிய போது , கிருஷ்ண பரமாத்மா தேரினை கீழே அழுத்த , நாகா அஸ்திரம் அர்ஜுனன் தலையில் இருந்த கிரீடத்தின் மீது பட்டு கிரீடம் கீழே விழுந்துவிட்டது – அர்ஜுனன் உயிர் கிருஷ்ண பரமாத்மாவால் காப்பாற்றப் பட்டது – இந்த நிகழ்வுகள் மூலம் “ கடவுளை நம்பியவர் கை விடப் படார் “ என்பதை ஆணித்தரமாக உணரலாம் –
-
 மஹாபாரத போரில் அர்ஜுனன் கிருஷ்ண பரமாத்மா மேல் கொண்ட சரணாகதி பக்தி  தத்துவம்தான் , இறைவன் தேரோட்டியாக வந்து போர் வெற்றிகரமாக நடத்தி வைத்தார்கள் – “ தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் , இறுதியில்  தர்மமே வெல்லும் “ என்பது முது மொழி ஆகும் ---இதை மெய்ப்பிக்கும் வகையில் கிருஷ்ண பரமாத்மா பாரதப்போரை முன் நின்று வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்கள்-
-
2- மஹாபாரத போரில் கடைசி 18 வது நாள் , குரு துரோணாச்சாரி மகன் அஷ்வத்தாமன் பாண்டவர்கள் மகன்கள் 5 பேரையும் வெட்டிக் கொன்று விடுகிறான் – அர்ஜுனன் அஸ்வத்தாமன் கொல்ல முனையும்போது , கிருஷ்ண பரமாத்மா , தடுத்து , அவனைக் கொன்றால் குரு சாபம் உனக்கு உண்டாகும் – ஆகவே அவன் தலை முடியை மழிக்கும் படி கட்டளை இடுகிரார் – அதன் மொட்டை அடிக்க , முதல் முதலாக மொட்டை அடிக்கும் பழக்கத்தைக் கிருஷ்ண பரமாத்மா ஆரம்பித்து வைக்கிரார்- ஆகவே தான் அன்று முதல் இன்று வரைக்கும் “ தலைக்கு வந்தது தலைப் பாகை யோடு போகட்டும் “ என்ற பழமொழி ஏற்பட்டு , திருப்பதியில் மொட்டை அடித்தல் விஷேசமாக கருதப்படுகிறது –
-
3 – பிராமணர் சமுதாயத்தில் கணவனை இழந்த பெண்கள் கண்டிப்பாக மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு – அதை கடை பிடிக்கவும் செய்தார்கள் – மொட்டை பாப்பாத்தியை பார்த்து விட்டு ஒரு காரியதுக்கு சென்றால் அது விளங்காது என்றும் சொல்லுவார்கள் – ஆனால் இன்று காலப்போக்கில் இதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது வரவேற்கப்படுகிறது -- 
-
4- பொதுவாகவே பெண் குழந்தைகளுக்கு 6 8 ,10 வருடங்களில் நோய் , அடி படுதல் , உடல் பாதிப்புகள் உண்டாகும் – அப்போது பெண் குழந்தைகளுக்கும் மொட்டை போடுதல் பிராத்தனைகள் மூலம் செயல் படுத்தப் படுகிறது- பின் பருவம் அடைந்த பிறகு மொட்டை அடிப்பது வழக்கத்தில் இல்லை --  ஆனால் திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்த பிறகு ஒரு வருடதுக்குள் ,குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வக் கோவிலில்  மும மொட்டை அடிக்கும் பழக்கம் இன்றும்கூட நடைமுறையில் உள்ளது --  ஆனால் நவ நாகரீகத்தில் ஊறிய பெண்கள் மொட்டை அடிக்க மறுக்கும்போது அந்த பெண் தாய்க்கு ,  அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அந்த பெண் உடல் நோய் , சங்கடம் , சலிப்பு ,சோர்வு ,உண்டாகிறது – பின் மீண்டும் மொட்டை அடித்தால் தான் பிணி விலகுகிறது – இதை அனுபவத்தில் இன்றும்கூட காணலாம் –
-
5- ஆந்திராவிலும் , தமிழ் நாட்டிலும் , தெலுங்கு பேசும் , அல்லது தெலுங்கை தாயகம் ஆக கொண்ட  , ஒரு சில  குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் , தந்தை இறந்த பின் காரியம் செய்யும் நாளில் தலையை மொட்டை அடிக்கும் பழக்கம் உள்ளது –ஒரு சிலர் மீசையை விட்டு மொட்டை அடிக்கின்றனர் - இதன் பலன் நான் துக்கத்தில் உள்ளேன் என்று பொருள் ஆகும் –
-
6 – இன்னும் ஓரு சில சமுதாயயத்தில் குடும்பத்தில் ,அல்லது பங்காளிகள் வர்க்கத்தில் இறந்து போனால் , மொட்டை அடிக்காமல் முகச்சவரம் செய்தும, மீசையையும்  மழித்துக் கொள்கின்றனர் – இதன் அர்த்தம் குடும்பத்தில் துக்கம் ஏற்பட்டு  உள்ளது என்று சொல்லாமல் சொல்வது என்று பொருள் ஆகும் ---
-
7 – ஒரு குடும்பத்தில் அண்ணன் , தம்பி நான்கு பேர் உள்ளனர் – தம்பி மருமகள் முதல் முறையாக கர்ப்பம் ஆன , 8 வது மாதத்தில் , மூத்த அண்ணன் மனைவி மொட்டை அடிக்க , குழந்தை குறை பிரசவம் ஆகி , பிறந்து அன்றே இறந்து விட்டது – ஆக அன்று முதல் இன்று வரையில் குடும்ப பகை ஏற்பட்டு இன்றும் கூட பேச்சு , வார்த்தைகள் இல்லை –
-
8- கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை போட்டு விட்டால் முடி வெட்டுதல் , முகச்சவரம் செய்வது , அழுக்கு துணி துவைப்பதும் தடை செய்யப் பட்டுள்ளது –

9- உடல் நலம் சரியாக இல்லாமல் ICU வில் இருக்கும்போதும , உடல் நலம்பெற 3 கோவில்களில் ஒரு வருடத்துக்குள்ளாகவே 3 மாத இடைவெளியில் 3 மொட்டை அடிக்கும் வேண்டுதல்கள் இன்றும்கூட நடை முறையில் உள்ளது -
-
10- இறைவனுக்கு கேசவன் என்ற பெயர் உண்டு – இதன் பொருள் அழகிய முடிகள் கொண்ட அழகன் என்றும் பொருள் கொள்ளலாம் – பொதுவாக மொட்டை அடித்தால் . ஒரு அருவருப்பான , வித்தியாசமான தோற்றம் தெரியும் – நாத்திக வாதிகள் “ உசிரை கொடுத்த சாமிக்கு மசிரை கொடுக்கிறான் “ என்று கேலி செய்கின்றனர் – ஆனால்  இதன் பலன் இறைவனுக்கு என் அழகையும் , அகங்காரத்தையும் , விட்டு விடுகிறேன் அல்லது அர்ப்பணித்து விடுகிறேன்  என்று பொருள் ஆகும் –
-
*******************************************************************************************************************************
 ONLY ONE CALL , ICAN CHANGE YOUR LIFE STYLE , FOOLS OBEY PALNETS , WHILE THE WISE MEN JUST CONTROL THEM 
-
-ஒரு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல ஒரு மணி நேரம் ஆகும் உங்கள் ஜாதக விபரங்களையும் , எனது astro meenam p. oachamuthu inbox இல் அனுப்பி வையுங்கள் நான் ஒரு model jaadakam உங்களுக்கு mail or fb inbox இல் அனுப்பி வைக்கிறேன்-

-
ஜாதகம் சரியாக இருந்தால் , உங்கள் கடந்த காலம் , நிகழ காலம் , எதிர் காலம் , பற்றி பரிகாரத்துடன் , விளக்கமாக பதில் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும் நீங்கள் உங்கள் ANDROID MOBILE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் - 
-
தங்களிடம் ANDROID MOBILE இல்லை எனில் நாம் பேசியதை என்னுடைய I PAD மூலம் நான் பதிவுகள் , செய்து உங்களுக்கு EMAIL OR FB INBOX இல் அனுப்பி வைக்கப்படும் - தொடர்பு செல் – 093628-15547 – 
-
இதக்கான கட்டணம் RS- 1000- ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்ல மட்டும் - 
********************************************************************************
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க--- திருமண பொருத்தங்கள் கேட்க --ஜோதிட கட்டுரைகள் வாங்க --பணம் அனுப்ப வேண்டிய விபரம் ---
*******************************************************************************
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
செல் - 093628-15547- 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
-
என்னுடைய செல் - எண்கள்- RIM - 093628-15547 
- RIM - 093626-88385 
- MTS - 091508-88193 
BY Astro Meenam P Pachamuthu - IDAPPADI - 637101 , SALEM DT 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
- 
MY 5 FACE BOOK ID DETAILS 
**************************************** 
1- Astro Meenam P Pachamuthu 
2-Astro Meenam Muthu 
3-ASTRO MEENAM PACHAMUTHU 
4- Meenakshi Matrimonial 
5-
http://meenampachamuthu.blogspot.in/
******************************************************

************************************************************************************************************************************************************ 

Saturday, October 1, 2016

புரட்டாசி மாதத்தில் தலை முடி இறக்கம் செய்யலாமா ??? **********************************************************************************

புரட்டாசி மாதத்தில் தலை முடி இறக்கம் செய்யலாமா ???
**********************************************************************************
அம்மாவாசை & பௌர்ணமியில் முடி இறக்கம் செய்யலாமா ???
**********************************************************************************
கூடாதா ??? ஓர் ஆய்வு !!!!!
****************************************
-
குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம் :
*************************************************************
கிரக நாடி ------ பாடல் எண் -- 72
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
-
ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி ,
தேடிய ஞாயிறு ,செவ்வாய் , சனி தனில் ,
கூடிய ரோமம் குறைத்திட வல்லிரேல் ,
மாடு , மக்கள் , மைந்தர் , மாள்வீரே ---
-
பாடல் விளக்கம் :
&&&&&&&&&&&&&&&&&&
ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி மாதங்களில் , ஞாயிறு , சனி , செவ்வாய் , கிழமைகளில் , குழந்தைக்கு முடி எடுத்தால் , மாடும் , மக்களும் ,பிள்ளைகளும் இறந்து விடுவார்கள் என்பதாம் --
பொதுவாகவே இந்த கருத்தை தலைச்சன் குழந்தைக்கு , முதல் முடி எடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -- 2 வது 3 வது குழந்தைக்கும் முதல் முடி எடுக்க இந்த விதிகளையும் பயன் படுத்துங்கள் ---
-
2 , 3 , வது மொட்டை அடிக்கும்போது இந்த விதிகள் தேவை இல்லை—பொதுவாகவே ஞாயிறு கிழமைகளில் முடி எடுக்க , சுப காரியங்கள் செய்ய தடைகள் உண்டு --- ஆனால் அனுஸ்டானத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது -- ஆகவே தான் ஞாயிறு கிழமைகளில் சுப முகூர்த்தம் பஞ்சாங்களில் குறிக்கப் பட்டுள்ளது -
-
இசை ஞானி இளையராஜா அவர்கள் தமிழ் நாட்டில் தற்போது உயிருடன் உள்ள சித்தர்களை பௌர்ணமியில் நேரில் சந்தித்து ஆசி பெற்று , பௌர்ணமியில் மொட்டை போடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் -- இதன் பிறகு தான் அவர் சிம்பொனி இசைத்து உலகப்புகழ் பெற்றார்கள் –
-
எனக்கு தெரிய சில சித்தர்கள் , அம்மாவசை அல்லது பௌர்ணமியில் முக சவரம் அல்லது மொட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறனர் –
-
மருத்துவர்கள் அல்லது நாவிதர்கள் நமது ஊர்களில் சனிக்கிழமைகளில் வார விடுமுறையும் , அம்மாவாசைகளில் , மாத விடுமுறைகளும் விடப்படுகின்றனர் – இது ஊறுக்கு ஊர் விடுமுறைகள் மாறுபடும் –
-
மேலும் புரட்டாசி மாதம் என்பது பெருமாள் மாதம் என்பது ஆகும் -- ஆதி காலம் தொட்டே புரட்டாசி சனிக்கிழமைகளில் பழைய சமையல் மண் பாண்டம எடுத்து விட்டு , புதிய சமையல் மண் பாண்டம் வாங்கி ,சமையல் செய்து , இறைவனுக்கு புரட்டாசி 5 சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளுகை , படைத்தது , துளசி தீர்த்தம் சாப்பிட்டுவிட்டு , பெருமாள் கோவிலுக்கு சென்று திருக்கோடி தீபம் ஏற்றி , அன்னதானம் செய்யும் வழக்கம் இன்றும்கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது – அன்று மொட்டை போடுவதும் வழக்கத்தில் உள்ளது – 5 வது கடைசி சனிக்கிழமைகளில் சொந்தம் , பந்தம் , உற்றார் , உறவினர்களையும் , அழைத்து அன்னதானம் செய்யும் வழக்கம் உள்ளது –
-
மேலும் புரட்டாசி மாதம் என்பது திருப்பதி பெருமாள் மாதம் ஆகும் – சுமார் 1௦௦ வருடங்களுக்கு முன் புரட்டாசி 1 ஆம் தேதி நடைபயணம் செய்து 1௦ நாட்கள் கழித்து பெருமாளை தரிசனம் செய்து மொட்டை போட்டு , பின் நடை பாதையாக வீடு திரும்பி வந்தனர் , 1 மாதம் முழுவதும் பெருமாள் மாதம் ஆக வழிபட்டு வந்தனர் – ஆன்னால் தற்போது கார் , ரயில் , பஸ் , ஏரோப்ப்லன் , மூலம் திருப்பதி செல்லுகின்றனர் – ஆனாலும் இன்றும்கூட நடை பாதையாக திருப்பதி சென்று தரிசனம் செய்து , பின் பஸ்ஸில் ஏறி திரும்பி ஊருக்கு வருகின்றனர் --
-
************************************************************************************************************************************************************
ONLY ONE CALL , ICAN CHANGE YOUR LIFE STYLE , FOOLS OBEY PALNETS , WHILE THE WISE MEN JUST CONTROL THEM
-
-ஒரு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல ஒரு மணி நேரம் ஆகும் – உங்கள் ஜாதக விபரங்களையும் , எனது astro meenam p. oachamuthu inbox இல் அனுப்பி வையுங்கள் – நான் ஒரு model jaadakam உங்களுக்கு mail or fb inbox இல் அனுப்பி வைக்கிறேன்-
-
ஜாதகம் சரியாக இருந்தால் , உங்கள் கடந்த காலம் , நிகழ காலம் , எதிர் காலம் , பற்றி பரிகாரத்துடன் , விளக்கமாக பதில் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும் – நீங்கள் உங்கள் ANDROID MOBILE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் -
-
தங்களிடம் ANDROID MOBILE இல்லை எனில் நாம் பேசியதை என்னுடைய I PAD மூலம் நான் பதிவுகள் , செய்து உங்களுக்கு EMAIL OR FB INBOX இல் அனுப்பி வைக்கப்படும் - தொடர்பு செல் – 093628-15547 –
-
இதக்கான கட்டணம் RS- 1000- ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்ல மட்டும் -
********************************************************************************
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க--- திருமண பொருத்தங்கள் கேட்க --ஜோதிட கட்டுரைகள் வாங்க --பணம் அனுப்ப வேண்டிய விபரம் ---
*******************************************************************************
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
செல் - 093628-15547-
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
-
என்னுடைய செல் - எண்கள்- RIM - 093628-15547
- RIM - 093626-88385
- MTS - 091508-88193
BY Astro Meenam P Pachamuthu - IDAPPADI - 637101 , SALEM DT
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
-
MY 5 FACE BOOK ID DETAILS
****************************************
1- Astro Meenam P Pachamuthu
2-Astro Meenam Muthu
3-ASTRO MEENAM PACHAMUTHU
4- Meenakshi Matrimonial
5-http://meenampachamuthu.blogspot.in/
********************************

Friday, July 29, 2016

ஆடி மாதத்தில் புது மணத் தம்பதியரை பிரிப்பது ஏன் ??????
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதிவு எண் ; 89 ======= தேதி = 28 – 7 – 2015
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது என்னுடைய அனுபவ சொந்தக் கருத்து :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 = பொதுவாக அணைத்து ஜாதி மத இனத்தாரும் கடை பிடிக்கும் ஒரு நிகழ்ச்சி ஆக இது அமைந்து உள்ளது ==
2 == இது தலைச்சன் குழந்தை என்று சொல்லப்படும் முதல் குழந்தை பிறப்பு , மட்டுமே ஆடி மாதம் தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் ==
3 == இரண்டாவது , மூன்றாவது குழந்தை பிறப்புக்கு கடை பிடிப்பது இல்லை =
4 = கிராமங்களில் முதல் குழந்தையை மட்டுமே தலைச்சன் குழந்தை என்று அழைக்கப்படும் == முதல் கரு 3 மாதங்களில் களைந்து விட்டால் == அடுத்து 2 ஆவது குழந்தையின் பெயர் பெரிய பையன் என்று அழைக்கப்படும் =
5 = முதல் குழந்தை பிறந்து இறந்து விட்டாலும் = இரண்டாவது குழந்தை பெரிய பையன் என்றே அழைக்கப்படும் ==
6 = இந்த ஜோதிட சாஸ்திரம் தோன்றி சரியாக எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதும் துல்லியமாக தெரியவில்லை ??? தெரிந்தவர்கள் COMMENT போடலாம் = வரவேற்க்கிறேன் =
7 = இதில் கி . மு . கி . பி . ஆண்டுகளில் உள்ள கணக்குகளில் உள்ள குழப்பங்கள் வேறு ????
8= அந்த காலங்களில் தற்போது உள்ள மருத்துவ வசதிகள் இல்லை == ஏரத்தாழ 5௦ ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் மருத்துவச்சிகள் மட்டுமே பிரசவம் பார்த்தனர் == இன்னும் சில ஊர்களில் அனுபவம் உள்ள பெண்கள் பிரசவம் பார்த்தனர் ==
9 == உதாரணமாக 1915 ஆம் ஆண்டு எனது தந்தை 16 வது குழந்தையாகவே பிறந்தார்கள் == அவருக்கு முன் 2 மூத்த சகோதரிகள் மட்டுமே உயிரோடு இருந்தன == பாக்கி 13 குழந்தைகள் பிறந்து அனைத்தும் இறந்து விட்டனர் == அந்த அளவுக்கு மருத்துவ வசதி குறைவாகவே இருந்த காலம் ஆகும் ==
1௦ = மேலும் ஆடியில் கரு தரித்தால் 1௦ வது மாதம் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் == அப்போது அக்னி நட்சத்ர காலம் ஆகையால் தாய்க்கும் , குழந்தைக்கும் நன்மை நடைபெற ஆடியில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைத்தனர் ==
11 = மேலும் கர்ண பரம்பரையாக ஆடி மாதத்தில் போர்க்களம் என்றும் 18 நாட்கள் யுத்தம் நடந்து முடிந்தது என்றும் 18 வது நாள் கத்தியை காவிரி ஆற்றில் கழுவினார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு == ஆகவே இந்த காலத்தில் கரு தரிக்க வேண்டாம் என்றும் சொல்வார்கள் ==
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி ஜோதிட ரீதியான கருத்துக்களைப் பார்ப்போம் :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 == எந்த ஒரு கிரகமும் உச்சம் பெரும் போது அந்த கிரகத்தின் மூலத் திரிகோணம் ராசி பலம் இழந்து விடுகிறது ==
2 = சூரியன் சித்திரை மாதத்தில் உச்சம் பெரும் போது அதன் மூலத் திரிகோண ராசி ஆன சிம்மம் பலம் இழந்து விடுகிறது ==
3 = சிம்மம் என்பது காலப்புருஷ தத்துவப்படி 5 ஆம் இடம் பூர்விகம் , புத்திர ஸ்தானம் , மனம் , அறிவு , புத்தி , இவைகளில் குறைபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளன =
4 == உச்சனை உச்சன் பார்க்க பிச்சை எடுக்க நேரிடும் என்பது பழமொழி ஆகும் ==
5 = உச்சனை உச்சன் பார்க்க மச்சு வீடும் குச்சு வீடு ஆகும் என்பதும் பழமொழி =
6 == சித்திரைத் மாதத்து அப்பன் தெருவினிலே என்பதும் பழமொழி = சிலர் இதை சிவபெருமான் சிதம்பரத்தில் நான்கு வீதியில் நகர்வலம் வருகிரார் என்று சொல்வோரும் உண்டு =
7 ==சித்திரை மாதம் , செவ்வாய் கிழமை , சித்திரை நட்சத்திரதில் ஒரு குழந்தை பிறந்தால் அது ராஜ யோகம் என்றும் சொல்லப்படுகிறது =

]
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க------- திருமண பொருத்தங்கள் கேட்க------ஜோதிட கட்டுரைகள் வாங்க -------பணம் அனுப்ப வேண்டிய விபரம் --------------
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Wednesday, July 20, 2016

மனைவி அமையும் யோகம் எப்படி !
*****************************************************
*****************************************************
-
திருமணப் பொருத்தம் பார்ப்பதில் , தச வித திருமணப் பொருத்தம் ,உள்பட ,பல்வேறு தேர்வுகள் உள்ளன .
-
. இவைகள் எல்லாவரத்தை விட, பலமான முறையில் ,சதி பதிகளின் பொருத்தம் ,பற்றிக் காணும் ஒரு வழி உள்ளது ,
அது எப்படி என்று பார்போமா !
-
பெண்ணின் ஜெனன நட்ச்சத்திரம் முதல் ஆரம்பித்து எண்ணி ,அப் பெண்ணுக்கு வர இருக்கும் கணவனுடைய ஜனன நட்ச்சத்திரம் வரை எண்ணி
-
, வரும் தொகையை பன்னிரண்டால் பெருக்கி , ஒன்பதால் வகுத்து ,,மீதி வரும் தொகை ஒன்பதானல் ,, அவ்விருவருடைய பொருத்தம் உத்தமமாம்
- . மீதி 6 வருமானால்
அது மத்திமம் ,
- மீதி 3 வந்தால்
அது பொருந்தாத திருமணம் ஆகும் .
‘ கன்னியர் பிறந்த நாளை கணவனார்
வரைக்கு மெண்ணி
பன்னி ரன் டதனிறரக்கில்
பாரி லோன் பானுக்கீய
மண்ணு முத்தம் மொன்பதாம்
மத்திமம் ஆற தாகும்
இ ன்னத்தில் மூன்ற தாகில்
எடுப்பது பிச்சை தானே .
அழகான மனைவி - அன்பான துணைவி அமைவது எப்படி !
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
ஜனன இலக்கினதுக்கு ,9 ஆம் வீட்டின் அதிபதியும் ,சுக்கிரனும் கூடி ஜனன இலக்கினதுக்கு ,கேந்திர , திரிகோணம் , ஸ்தானங்களில் ,அமர்ந்து இருக்க ,அவ்விருவரில் யாராவது ஒருவர் உச்சம் ,அல்லது ஆட்சி ,பெற்றால் அந்த அமைப்பு லட்சுமி யோகம் ,எனப்படும்.
-
இருவரும் ‘உச்சம் ,அல்லது ஆட்சி ‘ பெற்றாலும் இந்த யோகம் வலுத்து காணப்படும் ..
-
லட்சுமி யோகம் உள்ளவர்கள் ,ராஜ விசுவாசம் ,
உடையவர்கள் ,தன – தான்ய- சம்பத்தும் ,வீடு ,நிலம் வண்டி ,வாகனம் ,சிறப்பாக அமையும் .
லட்சுமி யோகம் உள்ளவர்களுக்கு ,அழகான மனைவி , அன்பான துணைவி , அமைந்து சின்றின்பம் , பேரின்பமாக மாறி நன்மை பயக்கும் .
-
9- ஆம் இல்லம் பாக்கிய ஸ்தானம் எனப்படுவதால் ,இந்த இல்லம் அதிபதி பலம் பெறுவது நல்லது. அணைத்து பாக்கியம் கிடைக்கும் .சுக்கிரன் களத்ரகாரகன் ஆகையால் ,பொன் ,பொருள் ,வண்டி வாகனம் , வீடு , மற்றும் LUXURIOUS வாழ்க்கை அமையும் .
திரி கோன ஸ்தானம் என்பதும் லட்சுமி ஸ்தானம் என்பதும் ஒன்றே ஆகும்
-
அதாவது இலக்கினதுக்கு 1-5-9- இராசிகள் ஆகும் . 1 –ஐ விட 5 –பெரியது 5 ஐ, விட 9 – பெரியது ஆக 9 –ஆம் இடம் வலு பெற நல்ல யோகம் கிடை க்கிறது.
-
பூமி புரக்கும் ராஜயோகம்
++++++++++++++++++++++++++++++
ஒருவர் பிறக்கும்போது சாதாரணமாக ,இருந்து பின் அவரது சொந்த முயற்சியால் , வீடு ,நிலம் ,மனை ,போன்ற பூமி சொத்துக்களை ,நிறைய சம்பாத்தியத்தில், ஒரு அரசனுக்கு நிகரான வாழ்கையை நடக்க வேண்டுமானால் அதற்கான கிரக அமைப்பைக் காண்போம்.
==================================================================================================================================================
சௌபாக்கியவதி யோகம் சில விஷேச விதிகள் :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதில் சொல்லப்பட்டுள்ள விதிகள், பொதுவானவை அல்ல ,, அனைத்தும் விஷேச விதிகள் ஆகும் .
-
1. பெண் ஜாதகத்தில் இலக்கின்துக்கு 7 , 8 , மிடங்களில் ,பாவ கிரகங்கள் நிற்க ,9 ஆம் ராசியில் சுபர்கள் நிற்க ,மேற்படி தோஷங்கள் ,பலன் அற்றது, மாறாக, நன்மையான பலன்கள் நடக்கும் . பெண்ணும் செஸபாக்கியவதியாக இருப்பாள் .
-
2. 7 இக்கு உடையவன் ,6 ,இல் நிற்க ,அல்லது 6,7 ,ஆம் மிடத்து அதிபதிகள் ,12- இல் நிற்க , அல்லது 6,7, மிட அதிபதிகள் ஒரே நட்ச்சத்திர சாரத்திலோ , அல்லது இருவரும் ஒரே அம்சத்தில் சேரின் , அந்த பெண் கற்பு ம் ,ஒழுக்கமும் ,அடக்கமும் , பண்பும் ,சேர்ந்த பெண்ணாக இருப்பாள் ,
-
3 .ஏழுக்கு உடையவன் இலக்கினதிலும் ,ஆறாம் அதிபதி 7 அல்லது 12 இல் இருக்க , 7,12, ஆம் இட அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் இருக்க ,அல்லது ஒருவரையொருவர் பார்வை செய்ய , இதே பலன் உண்டுபண்ணும் .
-
4 .மகர இலக்கின ஜாதகருக்கு சந்திரன் தான் நின்ற ராசியில் கடைசி நவாம்சத்தில் ,அதாவது ராசியின் 9- வது பாதத்தில் நிற்க 6 இக்கு உடையவன் பார்வை செய்ய கற்புக்கரசியாகவும் , தர்ம சிந்தனை உடையவர்களாகவும் ,இருப்பாள் .
-
5 . யவனரின், ஸ்திரி ஜாதகப்படி 7 இக்கு உடையவர் கேந்திரத்தில் ,,நவாம்ச ரீதியாக, 6 இக்கு உடையவன் அம்சத்திலும் ,, 6 இக்கு உடையவன்னுடன் சேர , 12 இக்கு உடையவன் பார்வை பெற ,இந்த கிரக விதிகளில் ,ஏதானும் ஒன்றில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிக்கு பெருமை
சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும் .
-
6 .திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9, ஆகிய ராசிகளில் சுபர் நிற்க ,அந்த பெண் புத்திர பாக்கியத்துடன், சௌக்கியமாக வாழ்வாள் .
-.
7. இற்வில் பிறந்து ,இரட்டை ராசி லக்கினமாக ,அமைந்து அதாவது ரிஷபம், கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் , மீனம் ஏதானும் ஒன்று லகினமாகி அதில் சூரியன் ,சந்திரன் , அமர அந்த பெண் மஹா பாக்கிய யோகம் உண்டாகி ,தனம் , கற்பு , புத்திர ,பௌதிர ,ராஜ யோகத்துடன் வாழ்க்கை நடத்துவாள் .
-
8 . லக்கினம் , ராசி , இரண்டும் இரட்டை ப்படை ராசியில் அமர ,
அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.
!
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
.கட்டணம் உண்டு .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.
+++++++
ல்யாணந்தான் கட்டிக்கலாமா??
-
அவள்பறந்து போனாலே என்னை மறந்து போனாலே
நான்பார்க்கும்போது கண்களில் இருந்து மறைந்து போனாலே
-
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ -
-
ஒரு ஆண் , பெண் , திருமண தடைகளுக்கு பலவேறு காரணம் உள்ளன : அவற்றில் சிலவற்றைக் காண்போம்-
-
1 = ஜனன லக்கினாதிபதி லக்கினம் அல்லது களத்ர ஸ்தானம் இன்னும் 7 – ஆம் வீட்டிக்கு அல்லது இவ் இவ்விரண்டிக்கோ 3 , 6 , 8 ,12, மறைந்து இருந்தால் கால தாமதம் ஆன பிறகு திருமணம் நடக்கும்-
-
2 = பால்ய விவாகம் நடைமுறைக்கு வருவதாகவும் வைத்துக் கொள்வோம் = பேச்சு வார்த்தை முடிந்து பிறகு காலப் போக்கில் திருமணம் நடைபெற முடியாமல் தடை படுதல் =
-
3 = ஒரு சிலருக்கு வேறு ஒருவருடன் காந்தர்வ திருமணம் ஏற்பட்டு திருமணம் நடக்காமல் போய் விடுதல்
-:
4 = ஒரு சிலருக்கு திருமண நிச்சயதார்த்தம்
நடந்து பிறகு திருமணம் நடை பெறாமல் வேறு ஒரு மண மகனை திருமணம் செய்தல் - காத்திருந்தவன் இலவு காத்த கிளி போல் நின்று ஏமாந்து வேறு பெண்ணை திருமணம் செய்தல்-
-
5 - 7 ஆம் பாவம் எண்ணும் களத்ர பாவத்தில்
குரு , சனி ,ராகு , கேது , சூரியன் , செவ்வாய் ,
போன்ற கிரகங்கள் இருக்க 27 முதல் 30 வயது
திருமணம் நடை பெறாமல் தள்ளிப் போகும்-
-
6 - இதே கிரக அமைப்புகள் 2 ஆம் ராசியில் இருந்தாலும் திருமண தடை சாதாரணமாக நடைபெறும் -இளமையில் ஒரு சிலருக்கு திருமணம் நடை பெற்றாலும் முதல் திருமணம் விவாக ரத்து ஆகி மீண்டும் இரண்டாவது திருமணம் நடைமுறைக்கு வருகிறது =
-
7 - ஜென்ம லக்கினம் எதுவாக இருந்தாலும் அந்த ஜாதகத்தில் சூரியன் ரிஷபம் , துலாம் , கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தாலும் திருமண தடைகள் ஏற்படும்-
-
8- ஜனனம் ஒரு வேளை பாபத் திரி யோகமாக அமைந்து இருந்தால் இத்தகைய திருமண தடைகள் நடைமுறைக்கு வராமல் போகலாம்-
-
9 - ஒரு ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் எங்கு கூடி இருந்தாலும் திருமணம் தடைகள் உண்டாகின்றன-
-
10 - இலக்கினதுக்கு 7 ஆம் ராசியில் சந்திரன் + சுக்கிரன் கூடினாலும் அவர்களை சனியோ , செவ்வாய் பார்த்தல் , அவருக்கு விவாகம் நடை பெறாது போகும் என்பது பொது விதி-
-
11- ஜனன லக்கினம் 12 ஆம் ராசியில் சனி , செவ்வாய் இருக்க அல்லது பார்க்க திருமண தடை உண்டு-
-
12 – ஜனன லக்கினம் 12 ஆம் ராசியில் சந்திரன் + செவ்வாய் பலம் பெற்று நின்றால் அந்த ஜாதகருக்கு திருமண தடைகள் உண்டு-
-
13 -7 ஆம் பாவம் களத்ர காரகன் ஆகிய சுக்கிரன் பாவ கத்தாரி யோகம் பெற்றாலும் திருமண தடைகள் உண்டு-
-
*******************************************************************************************************************************************************************
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க------- திருமண பொருத்தங்கள் கேட்க ------ஜோதிட கட்டுரைகள் வாங்க -------பணம் அனுப்ப வேண்டிய விபரம் --------------
-
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
செல் - 093628-15547

Friday, March 18, 2016

சப்த   கோள்கள்  உச்சம்  அடையும்  போது  தரும்  பலன்கள் ;
**********************************************************************************



             1 . சூரியன்  மேஷத்தில்  உச்சம் பெரும்  பலன்
            *******************************************************************

  ஜாதகன்  பிரபலம் , உடையவன் , எதிரிகளை  வெல்வான் ,உறவினர்  மற்றும் விருந்தாளிகளிடம்  பிரியம்  உள்ளவன் .அரசாங்க  சகாயம்  உண்டு .அதிக தனம்  உடையவன் ,  சத்யம் , தருமம் , நீதி , நேர்மை ,உள்ளவன் .
-

            2 . சந்திரன்  ரிஷபத்தில்  ; உச்சம் பெரும்  பலன்
            *****************************************************************
-

ஜாதகன்  நல்ல  செயல் உடையவன் , நிறைந்த  தனம்  உடல்  பலம் உள்ளவன் . தேவர் , பிராமணர்களை  ,நேசிபபவனும் ,பணக்காரன் , விலைஉயர்ந்த  வாகனம்  உடையவன் .
-

             3. செவ்வாய்  மகரத்தில் உச்சம் பெரும்  பலன் ;
             *****************************************************************

ஜாதகன்   சூரன்   பெரியோர்களைக்  காப்பவனும்    யந்திர  வித்தை அறிந்தவன்  ,தேவர் , பிராமணர்  ,நேசிபபவனும் ,மேலும்  அவர்களை திருப்தி  செய்து  வாழுவான்
.
             4 .   புதன்  கன்னியில் உச்சம் பெரும்  பலன் ;
-           ***********************************************************

ஜாதகன்   பெண்களுக்கு  இனியவன்  ,தான , தருமம்  செய்யும்  குணம்  உடையவன்  . பெரியோர்கள் , தேவர்களிடம்  பக்தி  உள்ளவன் ,.எப்போதும் சாது  , மக்களிடம்  பிரியம்  உள்ளவன் .

              5 .குரு   கடகத்தில்  உச்சம் பெரும்  பலன் ;
-          *************************************************************
 ; ;

ஜாதகன்  பலவித  பொருட்களை  உடையவன்  ,சங்கீதம் ,சிற்பம் ,காவியம் ,முதலியவர்றில்  தேர்ச்சி  பெற்றவன் . இனிமை , தயவு ,தாட்சண்யம் , உடையவன் .தெய்வீக  காரியங்களில்  நாட்டம்  உடையவன் .

             6 , சுக்கிரன்  மீனத்தில்  உச்சம் பெரும்  பலன் ;
-          *****************************************************************


ஜாதகன்  புண்ணியவான்  ,நல்ல  புகழ்  உள்ளவன் ,சத்தியவான் , வசதியான வாகனம்  உடையவன் ,எல்லோருக்கும்  இனியவன்  ஆவான் .

             7 .சனி  துலாத்தில் உச்சம் பெரும்  பலன் ;
-         ************************************************************

ஜாதகன்  எதிரிகளை  அழிப்பவன் ,தனவான் . அதிக  கர்வம்  இல்லாமல் ,ஆசாரத்துடன்  இருப்பான்  .அதிக  போகம் தரும்  மனைவியை  உடையவர் .விலை  உயர்ந்த வாகனம்  உடையவர் , அரசர்களால்  மதிக்கபடுபவன். கிராமங்களில்  தலைவன்   ஆவான் .

உங்கள்   ஜாதக  எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
-

.கட்டணம் உண்டு
****************************
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P.  பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547


****************************************************************************************************************

Monday, March 14, 2016

பெண்களின் திருமண வாழ்க்கையும் 7 – ஆம் அதிபதியும் பொதுப்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்கள் ;
+++++++++++
-
1 .7 –ஆம் பாவம் சுபர் பார்வை , சம்பந்தம் இல்லாமல் இருந்தால்,,நல்ல கணவனைத் தரும் ஆனால் அதிருஷ்டம் இல்லை
-
2 சனி – புதன் 7 இல் இருந்தால்-- கணவர் அலி தன்மை உடையவர் ,விந்துவில் உயிர் அணுவில் சக்தி இல்லாதவர்-
-
.
3. 7 – ஆம் பாவம் சர ராசியானால் – கணவர் வீட்டை விட்டு வெளியில்இருக்கும் நிலை உள்ளவர்
-
4 7 – ஆம் பாவத்தில் சூரியன் இருந்து பாவிகள் பார்த்தாலும் ,கணவரால் கை விடப்படுவார்
-
5 .-7 ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்து பாவிகள் பார்வை செய்தாலும் ,சேர்ந்து இருந்தாலும் . இளமையில் விதவையாம்
-
.
6. 7 – ஆம் பாவத்தில் சனி பாவிகள் சம்பந்தம் பெற்றால் கடைசி வரை திருமணம் ஆகாமல் இருப்பர் .
-
7 . பாவிகள் 7 –ஆம் பாவத்தில் இருந்தால் , சுபர் பார்வை இல்லா விட்டால் இளமையில் விதவை .
-
8 – 7 – ஆம் பாவத்தில் சுபர் ,பாவர் , சம்பந்தம் பெற மறுமணம் உண்டு
-
9 – ஆம் பாவம் பலமற்று ,பாவிகள் சம்பந்தம் பெற கணவரால் ஒதுக்கிவைக்க படுவார் .
-
10 . சுக்கிரனும் , செவ்வாயும் , நவாம்சத்தில், பரிவர்தனை பெற்றால்பல ஆண்கள் தொடர்பு உண்டு
-
.
11. சுக்ரன் +செவ்வாய் + சந்திரன் இணைந்து 7 ஆம் இடத்தில் ராசி , அம்சத்தில் இருப்பது கணவரின் அனுமதியுடன் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்படும் .இவையெல்லாம் பொதுப் பலன்கள் .
-

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் ஜாதக எதிர்கால , ,திருமண பொருத்தம் , பலன்கள்
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்

.கட்டணம் உண்டு
++++++++++++++++++++
.ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547

++++++++++++++++++++++++++++++++++++++++++++=++++======




Thursday, March 10, 2016

கால புருஷ தத்துவப்படி பன்னிரண்டாம் பாவம் மீனம் ராசியின்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொதுப் பலன்கள் தொகுதி -1
+++++++++++++++++++++++++++++ 

-
மனிதன் ஆரம்பம் ஆவதும் , பெண்ண்னு க்குள்ளே ‘
அவன் ஆவி அடங்குவதும் மண்ணு க்குள்ளே ,
ஆராய்ந்து பார் மனக் கன்னுக்குள்லே,
ஆத்திரம் கொள்ளாதே , நெஞ்சுக்குகுள்ளே ‘

-
அருமையான பாடல் வரிகள் ஒரு ஜாதகத்தில் இலக்கினதுக்கு 12 ஆம் பாவத்தில் அயன ,சுக ,போகமும், இந்த
உயிர் எப்படி , எங்கு , உயிர் , செல்லும் , என்றும் , மறு பிறவிகள் உண்டா , இல்லையா என்பதையும் ,இந்த ஜாதகருடைய விரயங்கள் ,சுபமா ,அல்லது அசுபமா ,என்றும் இன்னும் பல்வேறு காரகத்துவங்கள் அடங்கி உள்ளன. .
-
ஊடல் உணர்தல் புணர்தல் இவை

காமம் கூடியார் பெற்ற பயன்
-
திருவள்ளுவர் குறள் 1009 படி ஊடல் ,உணர்வு ,பெறுதல் ,பின் கூடி மகிழ்தல் , ஆகியவை தலைவனுக்கும் , தலைவிக்குக்கும் ,இன்பம் தரும் செயல்கள் ஆகும் ..
-
மீன ராசியில் பூரட்டாதி 4, பாதங்களும் உத்திரட்டாதி 1-2-3-4- பாதங்களும் , ரேவதி 1-2-3-4- பாதங்களும் உள்ளன .மேலும் மீன ராசி என்பது கால புருஷ தத்துவப்படி மீனம் 330 TO 360 பாகை வரை உள்ள 12 வது ராசியாகும் -
-
இனி 12 ஆம் ராசி மீன ராசியின் குணங்கள் ;.
+++++++++++++++++++++++++++++++++++++++++
மீனம் உபய நீர் ராசி , பெண் ராசி , ,ஜீவன் ராசி ,இரட்டை ராசி ,புண்ணிய நதிகள் , நடுத்தர உயரம் ,அழகான முகம் , பொறுமை ,புத்திக் கூர்மை ,சுறுசுறுப்பு , தற்புகழ்ச்சியில் விருப்பம் , ஈரல் வியாதி, பித்த சுபாவம் , சிறந்த எழுத்தாளர் ,பேச்சாளர் , ஜோதிடத்தில் நல அறிவு ஆகிய குணங்கள்
கொண்டவர்
-
இனி 12 ஆம் பாவமாகியிய மீன ராசியின் கரரகத்துவங்கள்,
அரசாங்க பதவி , மறைமுகப் பகைவர்கள் ,அவர்களால் ஏற்படும் தொல்லைகள் ,உள் நாடு , வெளி நாடு , கடல் கடந்த பயணம் ,தூக்கம் இல்லாமை ,தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் இடம் ஆகும்-
-
இனி 12 ஆம் பாவம் எந்த ராசி & எந்த லக்னம் ஆனாலும் பொதுப்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்கள்
+++++++++++
-
முதலில் தந்தையின் ஸ்தானமாகிய 9 – க்கு 4 ஆம் 12 ஆம் ஆகும் இதன் மூலம் தந்தையின் சுகம் வீடு ,வண்டி, வீடு ,வாகனம் ,தாயார் நிலை கற்பு ,ஓழுக்கம் ,மனைவியின் தொழில் ,வருமானம் முதலியவைகளை 12 ஆம்
பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
தாயின் 4 ஆம் பாவத்திற்கு 9- ஆம் பாவம் 12 – ஆகும் , இதன் மூலம் தாயின் பாக்கியம் , கடவுள் நம்பிக்கை , தொழில் செய்து ,பணம் சம்பாதிப்பரா ??? , அல்லது வீடடுத தலைவியா ????முதலியவைகளை 12 ஆம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம் .-
-
இனி மூத்த சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 11 – க்கு 2 - ஆம் பாவம் ஆகும் இதன் மூலம் மூத்த சகோதரரர் அல்லது சகோதரியின் , கண் ,தனம் ,குடும்பம் , வாக்கு ,குடும்பம , போன்றவைகளையும் தெரிந்து கொள்ளலாம் .
-
இனி, இளைய சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 3 –க்கு-10- ஆம் 12- ஆம் இடம் ஆகும் , இதன் மூலம் வருமானம் ,தொழில் ,ஜீவன் ,கர்மா ,மனைவியின் ,சுகம் , வீடு ,கற்பு , நிலைகளை தெரிந்து கொள்ளலாம் .
-
இனி தாய் மாமன் ஸ்தானம் ஆகிய 5 ஆம் 8 – ஆம் இடம் 12 ஆகும் ,இதன் மூலம் ஆயுள் ,விபத்து , கண்டம் திடீர் இராஜயோகம் , தாய் மாமனின் மனைவியின் படிப்பு , கண் ,குடும்ப நிலை தனம் , தெரிந்து கொள்ளலாம்
-
ஏன் எனில் 5 –க்கு 7 –ஆம் 11 –என்பது அத்தை க்கு 2- ஆம் பாவம் 12 – ஆகும்
-
இனி இறுதியாக ,மனைவிககு வரும் நோய் ,கடன் செய்வினை கோளாறுகள்
-
உழைப்பு நிலைகளை தெரிந்து கொள்ளலாம் . ஏன் எனில் 7 –க்கு -6 – ஆம் இடம் 12 ஆகும் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12 க்கு உடையவன் குரு,சுக்கிரன் ,என்றால் – தான் வணங்கும் தேவதை யின் உலகம் – சூரி – இராஜயோகம் , சந் – பிதுர் லோகம் , செவ்வாய் – வீர சொர்க்கம் ,12 – புதன் – பரி பூரணமாக சுதந்திரம்தான் பெற்று எங்கு நினைததாளும் செல்லும் , சனி ,ராகு ,கேது இருந்தால் எமனூர் என்னும் ‘பிரம்மலோகம் ‘ செல்லும் வானு உலகில் ‘மறவியூர் ‘என்னும் விண்ணுலகம் செல்வர்
-
புல் தரையில் சயனிக்க ; 

+++++++++++++++++++++++++++
12 க்கு உடையவன் 6 அல்லது 8 – இல் அமர ராகு 12 இல் இருந்து சுபர் பார்வை செய்யாவிடில் மெலும் புல் தரை சயனம் ஆகும் .
-
தேடிய பொருளை புதைத்து வைப்பான் ;


+++++++++++++++++++++++++++++++++++++++++
12 ஆம் வீட்டுக்கு உடையவன் பாவிகளுடன் சேர்ந்து,சுபர் வீட்டில் இருந்தாலும் ,கூடினாலும் , பார்த்தாலும் ,12 க்கு உடையவர் 12 இல் அமர பொருள் அதிகம் தேடி , ஒருவருக்கும் கொடுக்காமல் புதைத்து வைப்பான்.
பொருளை வைத்த இடம் தெரியாமல் விழித்தல் ;
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-
12 இல் செவ்வாய் தனித்து நிற்க அல்லது 12 ஆம் வீட்டை பார்க்க ,தேடி புதைத்து வைத்த பொருளை ,வைத்த இடம் தெரியாமல்மறந்து இழப்பான்என்பதாம்
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 093628 - 15547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
.கட்டணம் உண்டு .
+++++++++++++++++++++

ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 093628 - 15547.

-

Monday, March 7, 2016

பண்ணிரு பாவங்களில் மாந்தி நின்ற பொது பலன்கள் :

பண்ணிரு பாவங்களில் மாந்தி நின்ற பொது பலன்கள் :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
மாந்தி சனியின் புதல்வர் என்று அழைக்கப்படுகிறார் .மாந்தி நவாம்சத்தில் இருக்கும் 
இடம் இறப்பை கணிக்க உதவும் ஸ்தானம் என்று சொல்லப்பட்டுள்ளது .
-
மாந்தி நவாம்சத்தில் இருக்கும் இடத்திக்கு கோட்சார சனி வரும் காலமும், பார்க்கும்
 காலமும் ஒருவருக்கு மரணத்தை தரும் என்று கூறப்பட்டுள்ளத. .
-
1 . மாந்தி லக்கினத்தில் இருந்தால் ;
விஷம் தீண்டுவதால் ஆபத்து , கண் கோளாறு ஏற்படும் 
.
2 .மாந்தி 2 இல் இருந்தால் ,
கல்வி அறிவில்லாத ஏழை

3 .மாந்தி 3 இல் இருந்தால்
நீண்ட ஆயுள் ,செல்வம் ,புகழ் ,உடன் பிறப்பால் நன்மை

4 . மாந்தி 4 இல் இருந்தால் ;
கால்நடை –விவசாயம் ,நன்மை வெளி ஊர்களில் வசிக்கும் நிலை ஈற்படும் .

5. மாந்தி 5 இல் இருந்தால் ;
மூத்தோருக்கு ஆகாத நிலை , தகப்பன் உறவு பாதிக்கப்படும் .

6. மாந்தி 6 இல் இருந்தால் ;
இறக்கம் ,செல்வம் , புகழ் ,பிறரால் விரும்பப்படும் நிலை ஈற்படும் .

7 .மாந்தி 7 இல் இருந்தால் ;
பல பெண்கள் தொடர்பு ஈற்படும் .சட்ட.ததிற்க்கு புறம்பான நிலையில் செல்வர் ;

8 . மாந்தி 8 இல் இருந்தால் ;
குறையான ஆயுள் , சண்டை போடுவார் ,நண்பர்கள் குறைவு ,விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் .

9 . மாந்தி 9 இல் இருந்தால் ;
ஏழ்மை – பிறர் மீது குற்றத்தை சாட்டுவார் .

10. மாந்தி 10 iஇல் இருந்தால் ;
முரட்டுதனமான ,பிடிவாத குணம் உள்ளவர் .

11. மாந்தி 11 இல் இருந்தால் ;
வீடு ,நிலம் , அதிருஷ்டம் உதவியுடன் புதையல் எடுப்பார் ,வாகன வசதி உண்டு .

12 மாந்தி 12 இல் இருந்தால் ;

பல தகாத காரியங்கள் செய்வார் ,கண் நோய் ஏற்படும் ,செல்வம் இழப்பு ஏர்படும் பல செலவுகள் செய்வார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
.கட்டணம் உண்டு .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.

++++++++++++++++++++++

Wednesday, March 2, 2016

மூலம்  நட்சத்திர தோஷம்—ஆய்வு – தொகுதி – 1
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-

1, பொதுவாக வாசன் திருக்கணித பஞ்சாங்கப்படி, ஆண்களுக்கு
மூலம் ,ஆயில்யம் ,கேட்டை,, விசாகம் , தோஷம் இல்லை என்றும்,பெண்களுக்கு  மட்டும்தான் தோஷம் உண்டு, என்று சொல்கிறது -
-                                                                                                                            
.ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் ,ஆண் , பெண் ,,இருவருக்கும் மேற்படிதோஷம் உண்டுபண்ணும் ,என்று சொல்ல பட்டுள்ளது .ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை தீர்வு இல்லை,, காரணம் இரண்டு பஞ்சாங்கமும், நடைமுறையில் ஜோதிடர் பயன்படுத்தி பலன் சொல்வதால்,  மக்கள் குழம்பி தவிக்கிறனர்...
-

2. உதாரணமாக, சேலம் மாவட்டம் ,இடைப்பாடியில், ஒரு திருமண பொருத்தம் போட்டால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணதில் உள்ள ஜோதிடர்கள் சிலர் ஏற்றுக் கொள்வது இல்லை,. காரணம் அவர்கள் பாம்பு பஞ்சாங்கம் பயன் படுத்து கின்றனர்,, ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் 16 பஞ்சாங்கம் வருகிறது .நான் பஞ்சாங்கலை குறை கூறவில்லை, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை, சுட்டிக் காட்டுகின்றேன் ,,

அவ்வளவுதான். ,நிற்க எமது அடுத்த கட்டுரை

தலைப்பு :
===========

வாக்கியமா ! திருக்கணிதமா !
++++++++++++++++++++++++++++
-

3 - உதாரணமாக நட்ச்சத்திர பாதம் மாறுபடுகிறது , ஜெய வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி திங்கள்கிழமை ,கேட்டை நட்சத்திரம் வாக்கியப்படி நா 18-28 வரை உள்ளது,. பின் மூலம் நட்சத்திரம் வருகிறது..

-
4 .வாசன்  பஞ்சாங்கபடி, நா 13-56 வரை கேட்டை உள்ளது ,ஏறத்தாழ நா 4-30  விநாடி வித்தியாசம் உள்ளது. ..இதில் 12 P.M மணிக்கு, ஒரு குழந்தை பிறந்தால் வாசன் படி மூலம் 1 ஆம் பாதம் காட்டும், ஆனால் வாக்கியப்படி, கேட்டை 4 ஆம் பாதம் காட்டும்போது ,பல குழப்பம் ஏற்படுகிறது., இவைகள் நீங்க காலம்தான் ,முடிவு செய்ய வேண்டும்,
-

5. “ ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்”  என்ற பழமொழி தமிழ் நாட்டில் தொன்று தொட்டே உள்ளது..பெண் மூலத்தில் பிறந்த அனைவரும் நிர்மூலம் ஆகி விடவில்லை, என்பதை ஒருசில சாஸ்திர குறிப்புகள்படி காணலாம்.
-

6.மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணினால் ,,கட்டிய கணவனின் தந்தைக்கு ஆயுள் பங்கம், என்று சொல்வது முற்றிலும் பொருந்தாத ஒன்று .., மாமனார் ஆயுள் பலம் வலுத்து காணப்படும் போது, இந்த மூல நட்ச்சத்திர பெண்ணால் ,,அவர் ஆயுளை பங்க படுத்த முடியாது ,
-                                                                                                                         மூலம் 1 ஆம் பாதத்தில் பிறந்த பெண்ணால் ,மாமனாருக்கு சிறிது தோஷம் உள்ளது ,என்று கூறலாம். அதிலும் முதல் பாதம் ஆரம்ப பாதி நேரத்தில் பிறந்திருந்தால் மட்டும், இந்த தோஷம் செய்யும்.. இதில் கூட சில விதி விலக்குகள் உண்டு .
-
.எனக்கு தெரிந்த உறவினர்  பெண்  மூலம் பாதம் 1 தான் ஆனால் மாமனார் நீண்ட ஆயுள் மருமகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இது எப்படி சாத்தியம், என்று பெண் ஜாதகத்தை பார்த்தால் கடகத்தில் குரு உச்சம், தனுசுவில் சந்திரன் பரிவர்த்தனை  பெற்ற காரணம்தான் ...
-
.இலக்கினதிக்கு 3 ஆம் பாவம் ,மாமனார்  ஸ்தானம் ஆகும், அந்த வீடும,, அந்த வீடடுக்காண கிரகம்வலு அடைந்த காரணம்தான்..
-

7. மூல நட்சத்திர இருப்பை எட்டு பாகமாக பிரித்து ,அதில் எந்த பாகத்தில் பெண் பிறந்து உள்ளார், என்றுபார்த்து, கீழ் கண்ட பலன்களை ,தெரிந்து கொள்ளலாம்.
-
 இது ஆதி அந்த பரம நாழிகை அல்ல.
+++++++++++++++++++++++++++++++++++++

-
8.முதல் பாகம் – அடி – வேர்ப்பகுதி மூலம் 1 வது  பகுதியில் பிறந்து இருந்தால் அது சர்வ நாசம் செய்யும் .
-

9 . இரண்டாம் பாகம் – அடி – மரம் .மூலம்  2 வது பகுதியில் பிறந்து  இருந்தால் அது தன நாசம் செய்யும்.'
-

10  மூன்றாம்  பாகம் – மரட்டை.மூலம்  3 பகுதியில் பிறந்து இருந்தால் அது சகோதர நாசம் செய்யும்.
-

11 .நான்காம் – பாகம் – கிளைகள் .மூலம்  4  பாகத்தில்  பிறந்தால் மாதூர் நாசம் செய்யும்.
-

12 .  ஐந்தாம் – பாகம்  - கிளை .;மூலம் -5- ஆம் பாகத்தில் பிறந்தால் , ஆள் அடிமை உண்டு..
-

13 .ஆறாம் – பாகம் – பூக்கள் ;

மூலம் -6 ஆம் பாகத்தில் பிறந்தால், அரசு விருது உண்டு
...

14. ஏழாம் – பாகம்  - விதைக்காய் .,;மூலம்  7 ஆம் பாகத்தில் பிறந்தால் ,பூமி லாபம் உண்டு..
-

15. எட்டாம் – பாகம் – சருகுகள் ;.,
மூலம் 8 –ஆம் பாகத்தில் பிறந்தால், அற்ப ஆயுள் ஈற்படும்..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

16.  வளர்பிறை மூலம் நட்ச்சத்திரதில் பிறந்தால்அது சுபம் தரும் .
-

17   தேய் பிறை மூலம் ஆனால் தோஷம் செய்யும்..
-

18. அம்மாவசை, பௌர்ணமி, திதி நாளில் மூலம் நட்ச்சத்திரத்தில்
பிறந்தால் அது மத்திம பலனை செய்யும் .
-

19 சித்திரை ,ஆடி, மார்கழி ,தை ,மாதங்களில் வரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது மத்தி மூலம் எனப்படும் , இதன்
பலன் சர்வ காரிய நாசம் உண்டுபண்ணும்.
-

20 வைகாசி ,ஆவணி , கார்த்திகை , மாசி , ஆகிய மாதங்களில் வரும் மூலம் சொர்க்க மூலம் எனப்படும் .இதன் பலன் ராஜ சம்பத்து கிடைக்கும்,
-

21 . ஆனி , ஐப்பசி ,புரட்டாசி , பங்குனி ,ஆகிய மாதங்களில் வரும் மூலம் பாதாள மூலம் இதன் பலன் தன நாசம் உண்டுபண்ணும் ..
-

22.புதன் கிழமை வரும் மூல நட்ச்சத்திரம் மரண யோகம் கொடுக்கும் இதில் பிறந்தவர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் ‘
-

23 . மூல நட்சத்திரத்தில் நடு பகல் பிறப்பு, தந்தைக்கும், ,மாலை நேர பிறப்பு .தாய் மாமனுக்கும். ,இரவு பிறப்பு ,தாய்க்கு ம் கெடுதல் பலன் உண்டாகும் .
-

24.     ஞாயிறு கிழமை வரும் மூலம் நட்ச்சத்திரம் மாமனாருக்கு கெடுதல் பலன் உண்டாக்கும் .
-.

25  மூலம் நட்ச்சத்திர ஆதி அந்த பரம நாழிகையை 16  பிரிவு களாக பிரித்து அதில் பிறக்கும் பெண் குழந்தைக்கு என்ன பலன் என்று காணலாம்.
-

1 வது பிரிவு தந்தைக்கு கெடுதல்
-
2- வது – பிரிவு சிறிய தந்தைக்கு கெடுதல்.
-
3 –வது – பிரிவு  அத்தையின் கணவருக்கு கெடுதல் .
-
4. –வது – பிரிவு தந்தை வழி பாட்டனுக்கு கெடுதல் .
-
5 – வது – பிரிவு தாயிக்கு கெடுதல் .
-
6 – வது  -பிரிவு பெரியம்மாவிகுக் கெடுதல் .
-
7  .-வது பிரிவு மாமனுக்கு கெடுதல் .
-
8 – வது பிரிவு பெரிய தகப்பனாருக்கு கெடுதல்
-.
9 – வது பிரிவு சிறிய தகப்பனாருக்கு  கெடுதல்
- .
10 – வது பிரிவு கால் நடைகளுக்கு கெடுதல் ‘
-
11 – வது பிரிவு வீட்டில் உள்ள ஊழியர்களுக்கு கெடுதல் ‘
-
12 – வது பிரிவு ஜாதகருக்குக் கெடுதல் .
-
13 – வது பிரிவு தமையனாருக்கு கெடுதல்
-.
14 – வது பிரிவு தந்தைக்கு கெடுதல் .
-
15.- வது பிரிவு கெடுதி இல்லை
-.
16 – வது பிரிவு கெடுதி இல்லை
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள்   ஜாதக  எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்.

=======================================================

கட்டணம் உண்டு .
+++++++++++++++++++

ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P.  பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.
======================================================

 .