Tuesday, December 1, 2015

திருமணம் ஆன 6 மதத்தில் முடி இறக்கலாமா ???? வேண்டாமா ?????

திருமணம் ஆன 6 மதத்தில் முடி இறக்கலாமா ???? வேண்டாமா ????? 

பதிவு எண் 102 ====== தேதி 24 – 11 -2015 


 1. பொதுவாகவே முடி இறக்குதல் என்பது பல வகைப்படும் == இதில் சுபம் & அசுபம் இரண்டும்தான் உள்ளது ===
 2. முதலில் சுபம் பற்றிக் காண்போம் == தலைச்சன் குழந்தை அல்லது முதல் குழந்தை பிறந்த ஒரு வருட காலத்துக்குள்ளேயே குல தெய்வ கோவிலில் , தகப்பன் , தாய் , குழந்தை , மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் , ஒற்றைப்படை எண்ணிகையில் முடி இறக்குவது என்பது பண்டைய காலம் முதல் இன்று வரையுலும் நடை முறையில் உள்ளது ===
 3. இனி அசுபம் பற்றி காண்போம் == நமது வீட்டில் பெரியவர்கள் அல்லது குடும்ப பங்காளிகள் இறந்து விட்டால் முக சவரம் செய்து மீசையை எடுத்து விடுவதும் == ஒரு சில இடங்களில் மொட்டை போட்டு , மீசையை மழித்து எடுப்பவர்களும் உண்டு =
 4. இதன் அர்த்தம்தான் என்ன ???? அதாவது எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது என்றும் அந்த துக்கத்தில் நான் இருக்கிறேன் என்றும் பொருள் கொள்ள வேண்டும் ===
5. இன்னும் ஒரு சிலர் கடினமான விபத்துக்கள் காரணமாக மருத்துவமனையில் சீரியஸ் ஆக இருக்கும் நேரத்தில் முடி இறக்க வேண்டிக் கொள்வதும் வழக்கத்தில் உள்ள ஒரு நிகழ்வுகள் தான் ===
6. பொதுவாகவே காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவுக்கு உள்ள பல்வேறு நாமாக்களில் ஒன்று தான் கேசவன் = கேசவன் என்றால் மிக அழகிய முடி கொண்டு உள்ளவர்கள் = என்று பொருள் கொள்ளலாம் == இன்றும் கேசவன் என்ற பெயர் கொண்ட மனிதர்கள் கூட மிக அழகிய தலைமுடி கொண்டு உள்ளார்கள் என்பதையும் காணலாம் ===
7. நாத்திகம் பேசும் மனிதர்கள் கூட கேலி செய்வது உண்டு == “ உசிரை கொடுத்த சாமிக்கு மசிரை கொடுக்கிரான் “ = என்று கேலி , கிண்டல்கள் , செய்வது உண்டு ===
8. ஆனால் இதில் அடங்கி உள்ள தத்துவம்தான் என்ன ???? எனக்கு “ உயிரை கொடுத்த சாமிக்கு என் அழகையும் சமர்பிக்கிறேன் “ == என்று பொருள் ஆகும் == பொதுவாகவே மொட்டை அடித்தால் ஒரு வித்தியாசமான , விகாரமாக தோற்றம்தான் உண்டு ===
9. ஆகவே திருமணம் ஆன 6 மாத காலத்தில் மொட்டை அடிக்க வேண்டாம் == என்பதேயாகும் என்னுடைய் கருத்து == தவிர்க்க முடியாத சமயம் என்றால்தான் முடி இறக்க வேண்டும் ===
10. திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமிப்பு மற்றும் இரு ஆன்மாக்கள் சேரந்து ஒரு புதிய ஆன்மாவை உருவாக்கும்போது இருவரும் அழகாகவும் இருப்பதும் ஒருவருக்கு ஒருவர் தோற்றம்தான் முக்கியம் ஆகும் ====
11. இதையே கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய பாடல்களில் == கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்பு கொடுத்தவள் முகமே ரோசாப்பூ = இன்று முதல் என் உரிமை எண் இதையத்து மாளிகை உன் உரிமை என்ன வந்தாலும் எது நடந்தாலும் இணைந்திருப்பேன் நான் உன்னிடமே துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் தொடந்து இருப்பேன் உன்னிடமே ===

ஆக திருமணம் ஆன ஒரு வருட காலத்தில் கணவன் மனைவி அழகிய தோற்றம்தான் MOST IMMPORTANT ஆகும். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


No comments:

Post a Comment